தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
தமிழகத்தை சேர்ந்த குகேஷ் இளம் வயதிலிலேய உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் , இன்று(டிச., 26) குகேஷை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். இதுபற்றி குகேஷ் கூறுகையில், ‛‛நன்றி ரஜினி சார், உங்கள் அன்பான வாழ்த்து நன்றி'' என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது குகேஷின் பெற்றோரும் உடன் இருந்தனர்.
இதேப்போல் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டினார். செஸ் வடிவிலான கேக் வெட்டி அதனை அவருக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். குகேஷ் மென்மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது “குகேஷ் மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம். அவரை பாராட்டியன் மூலம் என்னை நான் பெருமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.