மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழகத்தை சேர்ந்த குகேஷ் இளம் வயதிலிலேய உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் , இன்று(டிச., 26) குகேஷை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். இதுபற்றி குகேஷ் கூறுகையில், ‛‛நன்றி ரஜினி சார், உங்கள் அன்பான வாழ்த்து நன்றி'' என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது குகேஷின் பெற்றோரும் உடன் இருந்தனர்.
இதேப்போல் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டினார். செஸ் வடிவிலான கேக் வெட்டி அதனை அவருக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். குகேஷ் மென்மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது “குகேஷ் மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம். அவரை பாராட்டியன் மூலம் என்னை நான் பெருமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.