புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை நடிகை சன்னி லியோனுக்கும் கொடுக்கப்பட்டு வரும் தகவல் வெளியானதை அடுத்து, திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சன்னி லியோனுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டுமா? அதுவும் சன்னி லியோன் கனடா நாட்டைச் சேர்ந்தவர் . அவருக்கு எதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு உதவி தொகை வழங்குகிறது என்று சோசியல் மீடியாவில் அதற்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் இதை ஆராய தொடங்கினர். அப்போதுதான் நடிகை சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, எந்தெந்த அதிகாரிகள் மூலமாக இப்படி இன்னொருவரின் பெயரில் அவர் உதவி தொகை பெற்று வருகிறார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .