தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'மிஸ்டர்.பாரத்'. யு டியூபில் பிரபலமான பாரத் என்ற புதுமுகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை நிரஞ்சன் எழுதி இயக்குகிறார். சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரணவ் முனிராஜ் இசை அமைக்கிறார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1986ம் ஆண்டு வெளியான ரஜினி படத்தின் டைட்டிலான 'மிஸ்டர்.பாரத்' பெயரிலியே இந்த படம் தயாராகிறது. ரஜினி படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து. இந்த படம், அந்த படத்தின் தொடர்ச்சி, ரீமேக் என்ற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனார் நிரஞ்சன் கூறும்போது, “இது மிகவும் எளிமையான கதைக்களம். கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். பிடிவாதமான குணம் கொண்ட ஒருவன் காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால், ஒரு பெண்ணே முன் வந்து அவனிடம் காதல் சொல்லும்போது அதை அவனால் உணரக்கூட முடியவில்லை.
இது நிறைய ஆச்சரியங்களைக் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் படம். மற்றபடி ரஜினி சாரின் மிஸ்டர்.பாரத் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பை பயன்படுத்த அனுமதித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு நன்றி" என்றார்.