அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
நடிகை தமன்னா ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ-2 உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாலும் போட்டார், அவரை தேடி பல படங்களுக்கு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடச் சொல்லி வாய்ப்பு வருகிறது. ஆனால் அதை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில் அதற்கு அப்படியே எதிர்மாறாக தாங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சியில் தமன்னாவின் நடனம் வேண்டாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார்களாம் பிரபல பின்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன், ஹரிஹரன் மற்றும் அனுப் ஜலோட்டா என்கிற மூவர் கூட்டணி.
இந்த டிசம்பர் மாதத்தில் ஆமதாபாத், டில்லி மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் இந்த மூவர் கூட்டணி 'திரிவேணி' என்கிற பெயரில் லைவ் மியூசிக் கான்சர்ட் நடத்த இருக்கின்றனர். இந்தியாவில் முதன்முறையாக மூன்று இசை ஜாம்பவான்கள் ஒரே மேடையில் என்கிற விதமாக இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா மற்றும் நோரா பதேஹி ஆகியோரின் நடனங்களை சேர்க்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் சங்கர் மகாதேவனும், ஹரிஹரனும் நடிகைகளின் இந்த நடன நிகழ்ச்சிக்கு தடை போட்டு விட்டதுடன் இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான இசை நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும்.. ரசிகர்கள் இசையில் மட்டும்தான் தங்களை கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டார்களாம்.