விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
டிச.,5ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற தியேட்டருக்கு தனது கணவர் குழந்தைகளுடன் சென்ற ரேவதி என்கிற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் அதிகாலை காட்சிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் ரேவதியின் கணவரான பாஸ்கரும் மகளான ஷான்வியும் தப்பி பிழைத்து விட, ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவர்களது மகன் ஸ்ரீ தேஜ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தனது மனைவியின் இந்த திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் கணவர் பாஸ்கர் கூறும்போது, தான் இப்போது உயிர் வாழ்வதே தனது மனைவி செய்த தியாகத்தால் தான் என்று கூறியுள்ளார். அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது தன்னுடைய கல்லீரலில் ஒன்றை எனக்கு கொடுத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தார் என் மனைவி. ஆனால் அப்படிப்பட்டவர் இன்று என்னை விட்டுப் போய்விட்டார் என கண்கலங்க கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.