சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு |
பெஞ்சல் புயலால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வரலாறு காணாத மழையால் இந்த மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்பால் தத்தளித்து வருகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் வட தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் நிவாரண நிதி வழங்குவார்கள் என தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சென்னை, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.