தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
பெஞ்சல் புயலால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வரலாறு காணாத மழையால் இந்த மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்பால் தத்தளித்து வருகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் வட தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் நிவாரண நிதி வழங்குவார்கள் என தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சென்னை, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.