பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் |
பெஞ்சல் புயலால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வரலாறு காணாத மழையால் இந்த மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்பால் தத்தளித்து வருகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் வட தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் நிவாரண நிதி வழங்குவார்கள் என தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சென்னை, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.