23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. தமிழகத்தில் பெரும் வரவேற்பையும், வசூலையும் இப்படம் குவித்தது.
நாளை இப்படம் ஓடிடியில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால், பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி நாளாக முடிவுக்கு வருகிறது. இதனிடையே, இப்படத்தைத் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் தியேட்டர்களில் பார்த்த படமாக இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் சில லட்சம் பேர் கூடுதலாகப் பார்த்ததாகப் பதிவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை இந்த 'அமரன்' படம் பிடித்துள்ளது.
தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிகம் பேரால் பார்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.