ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. தமிழகத்தில் பெரும் வரவேற்பையும், வசூலையும் இப்படம் குவித்தது.
நாளை இப்படம் ஓடிடியில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால், பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி நாளாக முடிவுக்கு வருகிறது. இதனிடையே, இப்படத்தைத் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் தியேட்டர்களில் பார்த்த படமாக இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் சில லட்சம் பேர் கூடுதலாகப் பார்த்ததாகப் பதிவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை இந்த 'அமரன்' படம் பிடித்துள்ளது.
தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிகம் பேரால் பார்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.