‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. தமிழகத்தில் பெரும் வரவேற்பையும், வசூலையும் இப்படம் குவித்தது.
நாளை இப்படம் ஓடிடியில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால், பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி நாளாக முடிவுக்கு வருகிறது. இதனிடையே, இப்படத்தைத் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் தியேட்டர்களில் பார்த்த படமாக இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் சில லட்சம் பேர் கூடுதலாகப் பார்த்ததாகப் பதிவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை இந்த 'அமரன்' படம் பிடித்துள்ளது.
தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிகம் பேரால் பார்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.