10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை சாம் சி.எஸ்க்கு புஷ்பா-2 படக் குழு வழங்கியது.
இந்நிலையில் அது குறித்து சாம் சி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், புஷ்பா- 2 படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு எனக்கு இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோருக்கு நன்றி. அல்லு அர்ஜுன் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. எனது திரையுலக பயணத்தில் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ்சிலும் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்திருக்கிறார் சாம் சி.எஸ்.