‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். அதையடுத்து நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் சமந்தா என்ற பெயரில் சோபிதாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த பதிவை பார்த்துவிட்டு நடிகை சமந்தாதான் இந்த வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பதிவை வெளியிட்டவர் சோபிதா துலிபாலாவின் தங்கையான டாக்டர் சமந்தா என்பது தெரிய வந்துள்ளது.
இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அப்படி என்றால் இனிமேல் தனது மச்சினிச்சியை பெயர் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு நேரமும் நாகசைதன்யாவுக்கு முன்னாள் மனைவி சமந்தா ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பார் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.