சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். அதையடுத்து நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் சமந்தா என்ற பெயரில் சோபிதாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த பதிவை பார்த்துவிட்டு நடிகை சமந்தாதான் இந்த வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பதிவை வெளியிட்டவர் சோபிதா துலிபாலாவின் தங்கையான டாக்டர் சமந்தா என்பது தெரிய வந்துள்ளது.
இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அப்படி என்றால் இனிமேல் தனது மச்சினிச்சியை பெயர் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு நேரமும் நாகசைதன்யாவுக்கு முன்னாள் மனைவி சமந்தா ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பார் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.