ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். தற்போது நகைச்சுவை கலந்த குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். இதுதவிர அரசியலிலும் அவ்வப்போது பயணிக்கிறார். இவரது மகன் துக்ளக் அலிகான், ‛கடமான் பாறை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதை மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்தார்.
கடந்தவாரம் சென்னையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் போனில் துக்ளக் அலிகானின் நம்பரும் இருந்தது. இதை வைத்து இவர்களுக்குள் என்ன தொடர்பு என துக்ளக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் துக்ளக் அலிகானையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் துக்ளக் உள்ளிட்ட கைதான நபர்களை அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் அஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி துக்ளக் அலிகான் உள்ளிட்ட 7 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.