நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவில் தனது நாடங்களின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கோமல் சுவாமிநாதன். காரைக்குடியில் பிறந்து வளர்ந்த இவர் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார். பணி நேரம் போக மீதி நேரத்தை நாடகங்களுக்கு செலவிட்டார். நல்ல நாடகங்கள் பார்க்க அடிக்கடி சென்னை வருவார். 'பாலர் சோலை' என்ற பத்திரிகை நடத்தினார். 'தமிழ் எழுச்சி மன்றம்' என்ற அமைப்பை நடத்தினார். 1953ல் நண்பர்களுடன் இணைந்து 'இதயத் துடிப்பு' என்று நாடகத்தை அரங்கேற்றினார். இதுதான் அவரது முதல் நாடகம்.
பின்னர் சென்னை வந்த கோமல் இங்கு தீவிர நாடக பணியில் இறங்கினார். நாடங்களின் நுணுக்கங்களை கற்று தானே எழுதிய 'புதிய பாதை' என்ற நாடகத்தை 1961ம் ஆண்டு அரங்கேற்றினார். அதன் பிறகு தானே 'ஸ்டேஜ் பிரண்ட்ஸ்' என்ற நாடக கம்பெனி தொடங்கி ஏராளமான நாடகங்களை எழுதி அரங்கேற்றினார்.
அவர் நடத்திய 'நவாப் நாற்காலி','தண்ணீர் தண்ணீர்' நாடகங்கள் அதேபெயரில் திரைப்படமானது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் 'தண்ணீர் தண்ணீர்' பெற்றது. இவரது 'செக்கு மாடுகள்' நாடகம் 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரிலும், 'ஒரு இந்திய கனவு' அதே பெயரிலும், 'பெருமாளே சாட்சி' என்ற நாடகம் 'குமார விஜயம்' என்ற பெயரிலும், 'ராஜபரம்பரை' நாடகம் 'பாலூட்டி வளர்த்த கிளி' என்ற பெயரிலும், 'டெல்லி மாமியார்' நாடகம் 'கற்பகம் வந்தாச்சு' என்ற பெயரிலும் திரைப்படங்களானது. இவரது அசோக வனம், இருட்டில் தேடாதீங்க, நாற்காலி, என் வீடு என் கணவன் என் குழந்தை போன்ற நாடகங்கள் தொலைக்காட்சி தொடர்களானது.
அனல் காற்று, யுத்த காண்டம், ஒரு இந்திய கனவு படங்களை இயக்கினார். நாடகத்தில் வெற்றி பெற்ற கோமல் சுவாமிநாதனால் திரைப்படத்தில் வெற்றிபெற முடியவில்லை.