என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த வாரத்திலிருந்து ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனம் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் 'குட் பேட் அக்லி' பின்னணி இசைக்காகக் காத்திருக்க முடியவில்லை,” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஜிவி பிரகாஷ் 'பயர்' எமோஜியைப் பதிலாகப் போட்டிருந்தார். அதற்கடுத்து கமெண்ட்டாக, “எனது வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் 'குட் பேட் அக்லி' படத்தையும் தயாரித்து வருகிறது. 'புஷ்பா 2' பின்னணி இசை குறித்து சர்ச்சை எழுந்து அது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத்தும் மேடையில் தயாரிப்பாளர் ரவியைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். ஹைதராபாத்தில் நடந்த 'ராபின்ஹுட்' படத்தின் பட பத்திரிகையாளர் சந்திப்பிலும் தயாரிப்பாளர் ரவி சங்கர், “தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் வரை அவர் எங்களது படத்திலும், நாங்கள் படம் தயாரிக்கும் வரை தேவி ஸ்ரீ எங்களுக்கு இசையமைப்பார்,” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் அவர்கள் தயாரிக்கும் 'குட் பேட் அக்லி' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்குப் பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.