ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் |

பிரபல யூ டியூபரான டிடிஎப் வாசன் தனது மோட்டார் சைக்கிள் சாகச வீடியோக்களின் மூலம் லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்டிருப்பவர். யூ டியூப் பிரபலத்தை கொண்டு சினிமாவிலும் அறிமுகமானார். அவர் நடிப்பில் 'மஞ்சள்' வீரன் என்ற படம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பல்வேறு சிக்கல்களில் மாட்டி தற்போது அவரது டிரைவிங் லைசென்ஸ் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் 'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கப்பட்டு தற்போது அந்த படத்தில் கூல் சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாசன் 'ஐபிஎல்' (இந்தியன் பீனல் லா - இந்திய தண்டனை சட்டம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் உதவியாளர் கருணாகரன் இயக்குகிறார். இப்படத்தில் 'ஆடுகளம்' கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கருணாகரன் கூறும்போது “நாட்டில் நடைபெறும் திடுக்கிடும் சில குற்றங்களை நாம் செய்தித்தாள்களில் படித்து விட்டு சில தினங்களில் மறந்து விடுகிறோம். ஆனால் அந்த சம்பவங்களில் சிலவற்றின் பின்னால் வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியில் வருவதற்காக என்ன செய்கிறார்கள், அவர்களால் வெளியில் வர முடிந்ததா என்பதே படத்தின் கரு” என்றார்.