எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

ரங்கூன் படத்தை அடுத்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படம் இதுவரை 300 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காமெடி கலந்த காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த அமரன் படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியபோது பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் எடிட் செய்து முடித்த பிறகு தான் அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்த கதை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தோன்றியதால் அந்த காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன். அப்படி நான் செய்ததினால் தான் முகுந்த் வரதராஜனின் பிரச்னைகள், அவரது குடும்பத்தாரின் துயரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அந்த காமெடி காட்சிகளை நீக்கியதால்தான் சிவகார்த்திகேயனும் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இல்லையென்றால் அவருடைய வழக்கமான படங்களில் இதுவும் ஒன்றாகதான் இருந்திருக்கும் என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.