கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ரங்கூன் படத்தை அடுத்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படம் இதுவரை 300 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காமெடி கலந்த காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த அமரன் படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியபோது பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் எடிட் செய்து முடித்த பிறகு தான் அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்த கதை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தோன்றியதால் அந்த காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன். அப்படி நான் செய்ததினால் தான் முகுந்த் வரதராஜனின் பிரச்னைகள், அவரது குடும்பத்தாரின் துயரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அந்த காமெடி காட்சிகளை நீக்கியதால்தான் சிவகார்த்திகேயனும் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இல்லையென்றால் அவருடைய வழக்கமான படங்களில் இதுவும் ஒன்றாகதான் இருந்திருக்கும் என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.