ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன் என ஜெயம் ரவி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி வழக்கு தொடர்ந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ஜெயம் ரவி எடுத்த முடிவு தனது கவனத்திற்கு வரவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தும் முடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அவர்களது விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் இன்றே குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையில் ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொலி மூலமும் ஆஜரானார்கள். சமரச தீர்வு மையத்தில் இருவரும் நேரில் ஆஜராவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.




