இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன் என ஜெயம் ரவி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி வழக்கு தொடர்ந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ஜெயம் ரவி எடுத்த முடிவு தனது கவனத்திற்கு வரவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தும் முடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அவர்களது விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் இன்றே குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையில் ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொலி மூலமும் ஆஜரானார்கள். சமரச தீர்வு மையத்தில் இருவரும் நேரில் ஆஜராவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.