வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' |

தமிழில் ‛சொர்ணமுகி, தூண்டில், பிரியசகி' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். இவர் ஹிந்தியிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் 2010ம் ஆண்டில் ஹிந்தியில் தும்சே மில்கர் என்ற படம் வெளியானது.
இதற்கிடையே உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி நடிக்க ‛ஏஞ்சல்' என்ற படத்தை இவர் இயக்கினார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் உதயநிதி அரசியலில் பயணிக்க தொடங்கியதால் படம் பாதியில் நின்று போனது. இதுதொடர்பாக உதயநிதி தங்களது படத்தில் நடித்து கொடுக்கவில்லை என சர்ச்சைகள் எழுந்தன. கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் அதியமான். இதில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விதார்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.