ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன், வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மாளவிகாவுக்கு சில மர்ம நபர்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மன உளைச்சல் தரும்படியான டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாளவிகா தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.
''வலைதளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்''. என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேரள மாநில சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாளவிகாவுக்கு போன் டார்ச்சர் கொடுத்து வந்த அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.