ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன், வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மாளவிகாவுக்கு சில மர்ம நபர்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மன உளைச்சல் தரும்படியான டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாளவிகா தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.
''வலைதளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்''. என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேரள மாநில சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாளவிகாவுக்கு போன் டார்ச்சர் கொடுத்து வந்த அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.