22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன், வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மாளவிகாவுக்கு சில மர்ம நபர்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மன உளைச்சல் தரும்படியான டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாளவிகா தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.
''வலைதளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்''. என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேரள மாநில சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாளவிகாவுக்கு போன் டார்ச்சர் கொடுத்து வந்த அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.