தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

வரலாற்று சிறப்புமிக்க பல படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். ஆனால் அவர் பிற்காலத்தில் இயக்கிய படங்கள் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தரவில்லை. அதோடு கடும் விமர்சனங்களைத்தான் எதிர்கொண்டார். அதில் முக்கியமான படம் 'சௌந்தர்யமே வருக'.
இந்த படத்தில் சிவச்சந்திரன், சத்தார், ஸ்ரீப்ரியா, ரதி ஆகியோர் நடித்திருந்தார்கள். விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படம் தோல்வி அடைந்தது. இரு காதல் ஜோடிகள் அமெரிக்கா செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சில பிரச்சினைகள் என்கிற ஒன் லைன் கதையை வைத்துக் கொண்டு படம் முழுக்க அமெரிக்காவை சுற்றிக் காட்டிய ஸ்ரீதர், சிறிதும் லாஜிக் இல்லாத காட்சிகள், குறிப்பாக சண்டை காட்சிகளை கொண்டு படத்தை நிரப்பி இருந்தார்.
அப்போது படத்தை விமர்சித்த பத்திரிகைகள் 'சௌந்தர்யமே நீ வந்திருக்க வேண்டாம்'. என்றே விமர்சித்தன. 'யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பழமொழி ஸ்ரீதருக்கும் பொருந்தும்.