வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஒரு காலத்தில் வித்தியாசமான படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர், 80களில் வியாபார நோக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை இயக்கினார். காதல், ஆக்ஷன் இந்த இரண்டும் அவரது பார்முலாவாக இருந்தது. அப்படி அவர் இயக்கிய படம்தான் 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தை கே.ஆர்.ஜி தயாரித்திருந்தார்.
ஒரு சில தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து இந்த படத்திற்கு இசை அமைக்கச் சொன்னார். ஆனால் முதலில் அவர் மறுத்தார். காரணம் தயாரிப்பாளர் கேஆர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பே 'நீங்கள் இசை அமைத்தால் முதல் படமாக எனது படம் இருக்க வேண்டும்' என்றார். அதற்கு பாலசுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டிருந்தார். இதை கூறியே அவர் மறுத்தார்.
அப்படியென்றால் இந்த படத்திற்கு கேஆர்ஜியை தயாரிப்பாளராக்கி விடுகிறேன் என்று சொல்ல அப்படியே நடந்து, படம் தயாரானது. ஒரு கொடுமைக்கார எஸ்டேட் முதலாளிக்கும் அங்கு பணியாற்றும் ஊழியருக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. ரஜினி, ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றது. அத்தனை பாடல்களும் ஹிட்டானது. என்றாலும் பாடல்களில் தெலுங்கு வாசனை அடிப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு சில படங்களுக்கு இசை அமைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார்.




