மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், மூத்த எழுத்தாளர்களை பாராட்டி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருத்த காரைக்குடி நாராயணனுக்கு பாராட்டு விழா நடத்தியது. அந்த வரிசையில் தற்போது திரையுலகில் 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்திருக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கும் பாராட்டு விழா நடத்துகிறது.
'முத்துக்கு முத்தான விழா' என்ற பெயரில் நடைபெறும் இந்த விழா நாளை (29ம் தேதி) மாலை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், துணை தலைவர்கள் ரவிமரியா, யார் கண்ணன், செயலாளர் லியாகத்தலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
முத்துலிங்கம் 1973ம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் . அதன்பிறகு 47 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.