தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், மூத்த எழுத்தாளர்களை பாராட்டி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருத்த காரைக்குடி நாராயணனுக்கு பாராட்டு விழா நடத்தியது. அந்த வரிசையில் தற்போது திரையுலகில் 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்திருக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கும் பாராட்டு விழா நடத்துகிறது.
'முத்துக்கு முத்தான விழா' என்ற பெயரில் நடைபெறும் இந்த விழா நாளை (29ம் தேதி) மாலை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், துணை தலைவர்கள் ரவிமரியா, யார் கண்ணன், செயலாளர் லியாகத்தலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
முத்துலிங்கம் 1973ம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் . அதன்பிறகு 47 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.