பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக இந்த படம் திரைக்கு வந்தது. தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. பெரும்பாலான படம் காஷ்மீரில் படமாகி இருந்தது.
படம் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு இந்த படம் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதாகவும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதாகவும், அதனால் இந்த படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ அறிவித்தது. இதையடுத்து படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.