வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக இந்த படம் திரைக்கு வந்தது. தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. பெரும்பாலான படம் காஷ்மீரில் படமாகி இருந்தது.
படம் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு இந்த படம் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதாகவும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதாகவும், அதனால் இந்த படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ அறிவித்தது. இதையடுத்து படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.




