நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது |
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக இந்த படம் திரைக்கு வந்தது. தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. பெரும்பாலான படம் காஷ்மீரில் படமாகி இருந்தது.
படம் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு இந்த படம் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதாகவும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதாகவும், அதனால் இந்த படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ அறிவித்தது. இதையடுத்து படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.