ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாக உள்ளது.
இதனிடையே, இப்படத்தை வெளியிடத் தடை கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையான 55 கோடி ரூபாய் பணத்தை ஆகஸ்ட் மாதம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் தரவில்லை. அதைத் தராமல் 'கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரப்பில் இன்றைக்குள் அந்தத் தொகையைத் தந்துவிடுவதாக உத்தரவாதம் தரப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அந்தத் தொகையை செலுத்தி விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
எனவே, படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை.
இதனிடையே கங்குவா படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்று கிடைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.