டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரஜினி, கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அவர் கூறுகையில், ரஜினியை பொறுத்தவரைக்கும் எப்போதுமே அவர் இயக்குனர்களின் நடிகர். நாம் என்ன சொல்கிறோமோ அதை உள்வாங்கி அப்படியே நடித்துக் கொடுப்பார். அதோடு, உடன் நடிக்கும் சக நடிகர்களின் நடிப்பையும் கவனித்து அதற்கு ஏற்ற நடிப்பை தானும் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால், ஒரு நடிகர் மட்டுமின்றி, இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர் என பலர் அவருக்குள் இருக்கிறார்கள். அதனால் பல விஷயங்கள் அவர் உன்னிப்பாக கவனித்து செயல்படுவார். கேமராவுக்கு முன்பு வரும்போது மட்டுமே அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.