ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரஜினி, கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அவர் கூறுகையில், ரஜினியை பொறுத்தவரைக்கும் எப்போதுமே அவர் இயக்குனர்களின் நடிகர். நாம் என்ன சொல்கிறோமோ அதை உள்வாங்கி அப்படியே நடித்துக் கொடுப்பார். அதோடு, உடன் நடிக்கும் சக நடிகர்களின் நடிப்பையும் கவனித்து அதற்கு ஏற்ற நடிப்பை தானும் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால், ஒரு நடிகர் மட்டுமின்றி, இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர் என பலர் அவருக்குள் இருக்கிறார்கள். அதனால் பல விஷயங்கள் அவர் உன்னிப்பாக கவனித்து செயல்படுவார். கேமராவுக்கு முன்பு வரும்போது மட்டுமே அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.




