கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க தடை விதித்துள்ளது. படப்பிடிப்பு செலவுகள் அதிகரிப்பு, நடிகர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கமளித்தது.
இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது. இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப்பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப்போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்வுகாண முற்படும் வேளையில், வேலை நிறுத்தம் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.
அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.