பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் தீபிகா படுகோனே. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் வெளியிட்டார். அதோடு கர்ப்பமாக இருந்த போது பிரபாஸ் உடன் கல்கி படத்தில் நடித்து வந்த தீபிகா, அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு துவா படுகோனே சிங் என பெயர் வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்கள். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.