கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! |
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் தீபிகா படுகோனே. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் வெளியிட்டார். அதோடு கர்ப்பமாக இருந்த போது பிரபாஸ் உடன் கல்கி படத்தில் நடித்து வந்த தீபிகா, அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு துவா படுகோனே சிங் என பெயர் வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்கள். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.