இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்போகும் ராஜமவுலி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நடிக்கும் மகேஷ் பாபுவை தற்போது படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாற்றி வருகிறார். அதற்காக அவருக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து முடித்து படம் திரைக்கு வரும் வரை இந்த படத்துக்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று மகேஷ் பாபுவுக்கு ராஜமவுலி ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.