நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்போகும் ராஜமவுலி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நடிக்கும் மகேஷ் பாபுவை தற்போது படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாற்றி வருகிறார். அதற்காக அவருக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து முடித்து படம் திரைக்கு வரும் வரை இந்த படத்துக்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று மகேஷ் பாபுவுக்கு ராஜமவுலி ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.