பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! |
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள வேட்டையன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்த ஓரளவு பிரபலமில்லாத, தமிழுக்கு புதிதான நட்சத்திரங்கள் கூட நன்கு வெளிச்சம் பெற்றுள்ளனர். அப்படி இந்த படத்தில் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு தாதாவாக வந்து போலீஸ் அதிகாரியான ரஜினியின் என்கவுன்டருக்கு பலியாகும் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்துசமது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றவர்.
இந்த நிலையில் வேட்டையன் படம் மூலம் மட்டுமல்லாது சமீபத்தில் கேரளாவில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் தாதா ஓம் பிரகாஷ் என்பவருடன் தொடர்புபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டினுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து அந்த சிக்கலில் இருந்து அவர் வெளியே வர உதவி செய்ததற்காகவும் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வருகிறார் சாபுமோன்.
இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார் சாபுமோன். இந்த படத்தில் கதாநாயகியாக அதே பிரயாகா மார்ட்டின் தான் நடிக்கிறார். இவர் சாபுமோனின் நெருங்கிய குடும்ப நண்பரும் கூட. அடிப்படையில் சட்டம் படித்தவரான சாபுமோன் தனது முதல் படமும் நீதிமன்றத்தை மையப்படுத்திய படமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.