பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் | அஜித்திற்கு போட்டியாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ் | வேட்டையன் படத்தில் நானி நடிக்க மறுத்தாரா? | இயக்குனராக அறிமுகமாகும் வேட்டையன் வில்லன் நடிகர் ; கதாநாயகியாக பிசாசு நடிகை | விக்ரம் பட நடிகைக்கு போதை கும்பல் மிரட்டல் | மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மலையாள நடிகர் கைது |
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள வேட்டையன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்த ஓரளவு பிரபலமில்லாத, தமிழுக்கு புதிதான நட்சத்திரங்கள் கூட நன்கு வெளிச்சம் பெற்றுள்ளனர். அப்படி இந்த படத்தில் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு தாதாவாக வந்து போலீஸ் அதிகாரியான ரஜினியின் என்கவுன்டருக்கு பலியாகும் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்துசமது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றவர்.
இந்த நிலையில் வேட்டையன் படம் மூலம் மட்டுமல்லாது சமீபத்தில் கேரளாவில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் தாதா ஓம் பிரகாஷ் என்பவருடன் தொடர்புபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டினுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து அந்த சிக்கலில் இருந்து அவர் வெளியே வர உதவி செய்ததற்காகவும் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வருகிறார் சாபுமோன்.
இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார் சாபுமோன். இந்த படத்தில் கதாநாயகியாக அதே பிரயாகா மார்ட்டின் தான் நடிக்கிறார். இவர் சாபுமோனின் நெருங்கிய குடும்ப நண்பரும் கூட. அடிப்படையில் சட்டம் படித்தவரான சாபுமோன் தனது முதல் படமும் நீதிமன்றத்தை மையப்படுத்திய படமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.