ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். 'டாவுன் பிக்சர்ஸ்,வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் துவங்கியது. இந்த படத்தில் கதாநாயகியாக திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷூடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இட்லி கடை படப்பிடிப்பில் இணைந்ததாக தனுஷூடன் டீ க்ளாஸ் உடன் போட்டோ பதிவிட்டு, 'புதிய அறிவிப்பு' என வெளியிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் அருண் விஜய்யும் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அவரும் 2ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். அருண் விஜய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் "Excited on the new journey" என தனுஷின் ராயன் படத்தில் இடம்பெற்ற பாடலுடன் பதிவிட்டுள்ளார்.