சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நவராத்திரி விழாவை திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர். நவராத்திரி பூஜைகளிலும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா முதல் நாள் அன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள துர்கா தேவி சிலை முன்பாக வழிபாடு நடத்தி துவங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அப்படியே ஐதராபாத்தில் உள்ள தனது தோழியும் பின்னணி பாடகியுமான சின்மயி வீட்டிற்கும் விசிட் அடித்துள்ளார்.
அங்கே நடைபெற்று வரும் நவராத்திரி பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ள சமந்தா, சின்மயியின் குழந்தையை தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அப்பா அம்மாவுக்கு டாட்டா சொல்லச் சொல்லி சொல்வது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. சின்மயியும் சமந்தாவும் பல வருடங்களாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் தங்களது சொந்த வாழ்க்கையிலும் திரை உலகத்திலும் பல பிரச்னைகளை எதிர்கொண்ட போது ஒருக்கொருவர் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து நட்பை பேணி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




