சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சமீப காலமாக தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் கடந்த ஆண்டில் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் தான் வாங்கிய வீட்டில் குடியேறி இருக்கும் நயன்தாரா, அங்கு ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் பழங்கால பொருட்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து, தலையில் மல்லிகை பூச்சூடி, மங்களகரமாக இந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் நயன்தாரா. அவர் அணிந்துள்ள இந்த புடவையை இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனு என்பவர் தான் வடிவமைத்திருக்கிறார்.
அவர் நடத்திவரும் கைத்தறி ஆடை விற்பனை நிலையத்துக்கு புரமோஷன் செய்யவே இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் தற்போது மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன்-2 படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.