ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படத்தின் படப்பிடிப்பு கடத்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கியது. அதையடுத்து ஊட்டி, சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இறுதி நாள் படப்பிடிப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளயிட்டுள்ளார் சூர்யா.
அந்த வகையில், நான்கே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவர்களுடன் ஜெயராம், நாசர், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.