மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'.
இப்படம் பான் இந்தியா படமாக வெளியானாலும் தமிழகத்தில் மட்டுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இங்கு மட்டும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சுமார் 100 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்தது என்பது கோலிவுட் தகவல். மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆன நிலையில் நாளை அக்டோபர் 3ம் தேதி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




