ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் |

சில வருடங்கள் முன்பு வரை நடிகர் ஜெய் நடித்த படங்கள் பெரிய எண்ணிக்கையில் வெளியாகவில்லை. அதே சமயம் தற்போது அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது இயக்குனர் சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். கிரைம் திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் ஒரு கூர்க்கா கதாபாத்திரத்தில் ஜெய் நடிக்க இருக்கிறாராம்.
ஆச்சரியமாக இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக கதாநாயகியும் இல்லை. அதேபோல படத்தில் பாடல்களும் இல்லை என்ற தகவலை கூறியிருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். இந்த கதையை கேட்ட பல தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் கதாநாயகி இல்லாதது குறித்தும் கேட்டபோது இந்த படத்திற்கு அவை தேவைப்படவில்லை என்பதை உறுதியுடன் சொன்னேன். நடிகர் ஜெய் அதை புரிந்து கொண்டார் என்று கூறியுள்ளார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். வரும் மே மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.