பிளாஷ்பேக் : இயக்குனரான முதல் எழுத்தாளர் | 'வேட்டையன்' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா நடிக்கும் 'மௌனம் பேசியதே' சீரியல் | 'குரங்கு பெடல்' படத்திற்கு புதுச்சேரி அரசு விருது | கூட்டு பாலியலை பார்க்க வற்புறுத்தினார் : பாலச்சந்திர மேனன் மீது நடிகை புகார் | அட்லி - சல்மான்கான் படத்தில் இணையும் கமல்ஹாசன்! | ரஜினி புகழின் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்! - துஷாரா விஜயன் | துபாய் தொழிலதிபருடன் அனுஷ்காவுக்கு திருமணமா? | சினிமா மாறினாலும், சிவாஜியின் நடிப்பு மாறாது : கமல் புகழாரம் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படத்தில் 7 மாநிலங்களின் இசைக்கருவிகள்! |
எழுத்தாளர்கள் இயக்குனராவது இப்போது சகஜம். ஆனால் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் சினிமாவை கடுமையாக எதிர்த்தார்கள். சினிமாவே பார்க்க மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும், சினிமாவுக்கு பாடல் எழுத மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும் வாழ்ந்து முடிந்தார்கள். ஆனால் இவற்றுக்கு இடையில் அன்றைக்கு பிரபலமாக இருந்த எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தார்.
கொத்தமங்கல் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' என்ற தொடர்தான் அதே பெயரில் திரைப்பட காவியம் ஆனது. இதுதவிர பந்தலூர் பாமா, பொன்னி வனத்து பூங்குயில், ராவ் பஹதூர் உள்ளிட்ட பல நாவல்களை எழுதினார். 100க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.
1935ம் ஆண்டில் கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பட்டினத்தார்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். பின்னர் சந்திரமோகனா, மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், தாசி அபரஞ்சி போன்ற படங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டில் 'கண்ணம்மா என் காதலி' என்ற படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார். 1947ல் 'மிஸ் மாலினி' படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். 1953ம் ஆண்டில் 'அவ்வையார்' என்ற மெகா பட்ஜெட் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.