Advertisement

சிறப்புச்செய்திகள்

அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு | ஸ்பிரிட் படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்? | 'வேட்டையன்' வரட்டும், ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்… | இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்' | தேவரா ரிலீஸ்: ஆடு பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் | மகன்களின் இரண்டாவது பிறந்தநாள்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | சிம்பு, அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம் | அனிரூத், ஸ்ரீலீலா கூட்டணியில் ஆல்பம் பாடல் | அக். 4ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்' | 'கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம்': அமரன் படத்தின் சாய் பல்லவி அறிமுக வீடியோ வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவிர்க்கும் உறவு முறைகளால் தவிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் : பரிதவிக்கும் பிள்ளைகள்

27 செப், 2024 - 01:06 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-celebrities-stumbling-due-to-avoidable-relationships:-Paridavikum-Pillai

தமிழ் சினிமா 30, 40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை வேறு, இப்போது இருக்கும் நிலை வேறு. தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும், மனதளவில், சிலர் வளர்ச்சி பெறவில்லை என்றே சொல்லலாம். முன்பெல்லாம் திரைப்பிரபலங்கள் வாழ்க்கை பற்றி கிசு கிசுக்கள் வரும், ஆனால் விவாகரத்து வரை, குடும்பத்தை, குழந்தைகளை பிரியும் நிலை அதிகம் வந்தது இல்லை. ஆனால் தற்போது திரைஉலகில் பல பிரபலங்களின் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று வருவதை அதிகம் பார்க்க முடிகிறது.

இன்றைக்கு யார் வீட்டில் தான் பிரச்னை இல்லை. பொது மக்கள் குடும்பங்களிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்து வரை போகிறது. ஆனால் திரைபிரபலங்கள் குடும்பத்தில் நடந்தால் மட்டும் அது பொதுவெளியில் பெரிய பேசு பொருளாகிறது. இதனால் திரைப்பிரபலங்கள் பொருளாதார ரீதியாகவும், மன அமைதியின்றியும் தவிக்கின்றனர். எளிதில் பேசி தீர்க்கும் விசயம் கூட விவாகரத்து வரை செல்வது வருத்தம் தருகிறது. நடிகர்களை உச்ச நட்சத்திரமாக மனதில் வைத்து ரசிகர்கள் அழகு பார்க்கின்றனர். அவர்களை பற்றி எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகர்களால் முதலில் தாங்க முடிவதில்லை.

கண்ணாடி பிம்பங்களை போல பல வருட காதலும், குடும்பமும் உடைந்து போகிறது. இதனால் கணவனோ, மனைவியோ செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்படுகிறது. சில விசயங்களால், வார்த்தைகளால், வசீகர அழகை நம்பி உண்மையான காதலும் பொய்யாகி குடும்பம், குழந்தை விட்டு விலகி தனித்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

ரஜினி, கமல் என்று உச்ச நட்சத்திர வீடுகளிலும் பிரச்னை, பிரிவுகள், பிளவுகள் உள்ளன. கூடா நட்பு கேடில் முடியும் என்பது போல எல்லாவற்றுக்கும் பார்ட்டி, பந்தா, கேமரா வெளிச்சம், பெயர், புகழ், வெற்றி எல்லாம் தலைகால் புரியாமல் செய்யும் அந்த பிழைகள் கூட அவசியமற்ற பிரிவை பிரச்னையை குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட இந்த பிரச்னைக்கு நடிகர் ஜீவா பெயரும் அடிபட்டது. காரணம் அவர் மூலம் தான் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ரவிக்கு பாடகி கெனிஷாவின் அறிமுகம் கிடைத்தது. ஒரு புதிய நபரின் அறிமுகம் ஒரு குடும்பத்தையே பாழ் ஆக்கிவிட்டது.

தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகியோரை தொடர்ந்து ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிந்துள்ளனர். இவர்களின் பிரிவை வைத்து பல யு-டியூப் தளங்களில் காது, மூக்கு வைத்து பேசி பேசி காசு பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும், அவர்களை இந்த சமூகம் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும், பள்ளி குழந்தைகளோடு அவர்கள் எப்படி இயல்பாக பழகுவார்கள், அவர்கள் மன நிலை எப்படி எல்லாம் துடிக்கும், யாரிடம் அந்த குழந்தைகள் மனம் விட்டு பேசுவார்கள் என்று சிறிதும் யோசிப்பதும் இல்லை.

நடிகர் தனுஷ் தற்போது உள்ளூர், வெளியூர் எங்கு சென்றாலும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை தன்னுடனே அழைத்து செல்கிறார். ஜிவி பிரகாஷ் மகள் சிறு குழந்தை என்பதால் சைந்தவி வளர்த்து வருகிறார். ஜெயம் ரவி தனது மகன்கள் ஆரவ், அயன் ஆகியோரை தன்னோடு இருக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நம்பி அனுப்ப ஆர்த்தி தயங்குகிறார். தன் மகனின் எந்த ஒரு படத்தின் இசை வெளியீடு என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பவர் ரவியின் அப்பா எடிட்டர் மோகன். ஆனால் மகன் திருமண பிரிவு பிரச்னையால் பிரதர் பட இசை வெளியீடு பக்கமே அவர் வரவில்லை. மகனை எண்ணி வயதான தாயும், தந்தையும் நொறுங்கி போய் வீட்டிலேயே உள்ளனர்.

அதேசமயம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போன திரிஷா திருமணம், திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற சமந்தா போன்ற நடிகைகள் மீண்டும் எழுந்து படங்களில் நடித்து பிசியாகி வருவது அவர்கள் மன தைரியம் என்றே சொல்ல வேண்டும்.

கணவன் - மனைவி நான்கு சுவருக்குள் பேசி தீர்க்க வேண்டிய விசயத்தை ஆள் ஆளுக்கு பேசி, பேசி அதை பெரிதாக்கி, வலைதளங்கள் வரை கொட்டி தீர்க்கின்றனர். அவசர முடிவும், ஈகோ பிரச்னையும் தலை விரித்து ஆடும் நிலையில், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் வைத்து, ஆணோ பெண்ணோ தங்கள் குடும்ப பொறுப்புகளை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் மன நிலையை புரிந்து கொண்டு எந்த ஒரு பிரச்னையையும் வீட்டிலேயே பேசி தீர்க்க வேண்டும் என்பதே அநேக நபர்களின் கருத்தாக உள்ளது. அதேசமயம் பொதுவெளியில் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

திரை உலகை பொறுத்தவரை நடிப்பு என்பதும் ஒரு வேலையே. தங்கள் வேலையை மட்டும் பார்த்துவிட்டு, வீடு வந்த பிறகு கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் இவர்களோடு நேரம் செலவிட்டு தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்னையை இழுத்து கொண்டு வராமல் விட்டு விட்டால் திரை உலகம் அழகாகும். திரை நட்சத்திரங்கள் வாழ்வும் ஜொலிக்கும்.
குறிப்பு : திரைநட்சத்திரங்களை தங்களின் ஆதர்சன நாயகன், நாயகியாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கணும் என்கிற பொறுப்பும் கடமையும் பிரபலங்களுக்கு இருக்கு. ஆனால் அவர்கள் தடம் மாறும்போது ரசிகர்கள் உங்களை பார்க்கும் விதம் எப்படி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சினிமாவில் மட்டும் ஏக வசனம் பேசி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் நிஜத்திலும் அதை கடைப்பிடிப்பதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'கண்ணப்பா'வில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யா'கண்ணப்பா'வில் சூனியக்காரியாக ... பிளாஷ்பேக் :  வலிய சென்று வாய்ப்பினைப் பெற்று வாகை சூடிய சவுகார் ஜானகி பிளாஷ்பேக் : வலிய சென்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

27 செப், 2024 - 09:09 Report Abuse
ரவி நல்ல கருத்து.
Rate this:
saiprakash - coimbatore,இந்தியா
27 செப், 2024 - 05:09 Report Abuse
saiprakash தட்பொழுது இருக்கும் நடிகர் ,நடிகைகளுக்கு சமூக பொறுப்பே இல்லை ,அதனாலதான் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள்
Rate this:
Indian - kailasapuram,இந்தியா
27 செப், 2024 - 04:09 Report Abuse
Indian ரொம்ப முக்கியம் .ஊருல வேற ஒருத்தனுக்கு பிள்ளகைகள் இல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in