தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரடி தமிழ் படத்தில் நடித்ததில்லை. பலர் முயன்றும் அது நடக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்தார் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. தற்போது முதன் முறையாக 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார். ஹிந்தியில் 3 படங்களில் அமிதாப்புடன் நடித்த ரஜினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் மனித உரிமை ஆர்வலராக நடித்துள்ளார்.
இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இயக்குனர் த.செ.ஞானவேல் கூறியிருப்பதாவது: வேட்டையன் படத்தின் கதையை எழுதியபோது இந்த கேரக்டரில் இவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அவர்களை மனதில் வைத்தே கேரக்டரை எழுதினேன். அப்படி எழுதப்பட்டதுதான் அமிதாப் பச்சன் கேரக்டர். நான் அவரின் ரசிகன் அல்ல. அவரின் படங்களையும் பெரிதாக பார்த்தில்லை, மிகவும் பிரபலமான அவர் நடித்த பிளாக், சீணிகம், பிக்கூ படங்களை மட்டும் பார்த்தேன். மற்றபடி அவரை பற்றி எல்லோரையும்போல தகவல்களாக அறிந்து வைத்திருந்தேன்.
ரஜினியிடம் அமிதாப்பை நடிக்க கேட்கலாமா என்றேன். அதற்கு அவர் “இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நாங்களே மறுத்து விட்டோம். இப்போது மட்டும் ஒத்துக் கொள்வாரா என்ன? கேட்டுப் பாருங்கள்” என்றார். முதலில் அவரை சந்தித்து கதை சொன்னபோது அவருக்கு கதை பிடித்திருந்தது. அடுத்த சந்திப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதை பிடித்திருந்தாலும், ரஜினியுடன் நடிக்க விரும்பியதாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.