ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரடி தமிழ் படத்தில் நடித்ததில்லை. பலர் முயன்றும் அது நடக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்தார் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. தற்போது முதன் முறையாக 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார். ஹிந்தியில் 3 படங்களில் அமிதாப்புடன் நடித்த ரஜினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் மனித உரிமை ஆர்வலராக நடித்துள்ளார்.
இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இயக்குனர் த.செ.ஞானவேல் கூறியிருப்பதாவது: வேட்டையன் படத்தின் கதையை எழுதியபோது இந்த கேரக்டரில் இவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அவர்களை மனதில் வைத்தே கேரக்டரை எழுதினேன். அப்படி எழுதப்பட்டதுதான் அமிதாப் பச்சன் கேரக்டர். நான் அவரின் ரசிகன் அல்ல. அவரின் படங்களையும் பெரிதாக பார்த்தில்லை, மிகவும் பிரபலமான அவர் நடித்த பிளாக், சீணிகம், பிக்கூ படங்களை மட்டும் பார்த்தேன். மற்றபடி அவரை பற்றி எல்லோரையும்போல தகவல்களாக அறிந்து வைத்திருந்தேன்.
ரஜினியிடம் அமிதாப்பை நடிக்க கேட்கலாமா என்றேன். அதற்கு அவர் “இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நாங்களே மறுத்து விட்டோம். இப்போது மட்டும் ஒத்துக் கொள்வாரா என்ன? கேட்டுப் பாருங்கள்” என்றார். முதலில் அவரை சந்தித்து கதை சொன்னபோது அவருக்கு கதை பிடித்திருந்தது. அடுத்த சந்திப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதை பிடித்திருந்தாலும், ரஜினியுடன் நடிக்க விரும்பியதாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.