Advertisement

சிறப்புச்செய்திகள்

அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு | ஸ்பிரிட் படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்? | 'வேட்டையன்' வரட்டும், ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்… | இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்' | தேவரா ரிலீஸ்: ஆடு பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் | மகன்களின் இரண்டாவது பிறந்தநாள்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | சிம்பு, அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம் | அனிரூத், ஸ்ரீலீலா கூட்டணியில் ஆல்பம் பாடல் | அக். 4ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்' | 'கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம்': அமரன் படத்தின் சாய் பல்லவி அறிமுக வீடியோ வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வேட்டையன்' படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஒப்புக்கொண்டது எப்படி? ஞானவேல் விளக்கம்

27 செப், 2024 - 11:38 IST
எழுத்தின் அளவு:
How-did-Amitabh-Bachchan-agree-to-act-in-Vettaiyan-Explanation-of-Gnanavel


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரடி தமிழ் படத்தில் நடித்ததில்லை. பலர் முயன்றும் அது நடக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்தார் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. தற்போது முதன் முறையாக 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார். ஹிந்தியில் 3 படங்களில் அமிதாப்புடன் நடித்த ரஜினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் மனித உரிமை ஆர்வலராக நடித்துள்ளார்.

இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இயக்குனர் த.செ.ஞானவேல் கூறியிருப்பதாவது: வேட்டையன் படத்தின் கதையை எழுதியபோது இந்த கேரக்டரில் இவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அவர்களை மனதில் வைத்தே கேரக்டரை எழுதினேன். அப்படி எழுதப்பட்டதுதான் அமிதாப் பச்சன் கேரக்டர். நான் அவரின் ரசிகன் அல்ல. அவரின் படங்களையும் பெரிதாக பார்த்தில்லை, மிகவும் பிரபலமான அவர் நடித்த பிளாக், சீணிகம், பிக்கூ படங்களை மட்டும் பார்த்தேன். மற்றபடி அவரை பற்றி எல்லோரையும்போல தகவல்களாக அறிந்து வைத்திருந்தேன்.

ரஜினியிடம் அமிதாப்பை நடிக்க கேட்கலாமா என்றேன். அதற்கு அவர் “இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நாங்களே மறுத்து விட்டோம். இப்போது மட்டும் ஒத்துக் கொள்வாரா என்ன? கேட்டுப் பாருங்கள்” என்றார். முதலில் அவரை சந்தித்து கதை சொன்னபோது அவருக்கு கதை பிடித்திருந்தது. அடுத்த சந்திப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதை பிடித்திருந்தாலும், ரஜினியுடன் நடிக்க விரும்பியதாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல்தான் பிரிகிறேன்: ஜெயம் ரவிமனைவி டார்ச்சர் தாங்க முடியாமல்தான் ... 'கண்ணப்பா'வில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யா 'கண்ணப்பா'வில் சூனியக்காரியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in