திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் |
இந்தியன் 2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இதன்பிறகு இந்தியன் 3 படத்தின் பணிகளை தொடங்கும் அவர், அந்த படத்தை முடித்ததும் வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான உரிமையை பெற்றுள்ள ஷங்கர், சமீபத்தில் கூட இந்த நாவலின் காட்சிகள் சில படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தவர், இதுபோன்று யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இதன்காரணமாக அடுத்தபடியாக வேள்பாரி நாவலை உடனடியாக படமாக்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் நடிக்க விக்ரம், சூர்யா ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதோடு இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமான ஒரு பான் இந்தியா சரித்திர படமாக இந்த வேள்பாரி நாவலை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.