நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : விஷாலின் காழ்ப்புணர்ச்சி என நடிகர் உதயா குற்றச்சாட்டு | 10 வயது குறைவு... 8 ஆண்டுகளுக்கு பின் மனகசப்பு : விவாகரத்து கேட்டு கமல் பட நடிகை ஊர்மிளா மனு | ஏ.ஐ.,-யால் அடுத்த 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது - யுவன் சங்கர் ராஜா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா | வேட்டையன் : ரஜினிக்கு குரல் கொடுக்கும் மனோ | வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் 'ஏஐ' குரல் | மெய்யழகன் படத்திற்கு யு சான்றிதழ் | புதிய படங்களில் ரசிகர்களைக் கவரும் 80, 90களின் பாடல்கள் | கட்டண உயர்வு, 24 மணிநேர காட்சிகள் - மக்கள் ஏற்பார்களா? | புதுமுகங்கள் உருவாக்கும் 'ஆகக்கடவன்' |
ஏஐ தொழில்நுட்பம் சினிமா துறையில் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த நடிகர்களை திரையில் கொண்டு வருவதுடன், அவர்களின் குரல்களையும் கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'வேட்டையன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் 'பிரிவியூ' என்ற பெயரில் வெளியான டீசரில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டப்பிங் பேசியிருந்தார். அவரது குரல், அமிதாப்புக்கு சரியாக வரவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அமிதாப் கதாபாத்திரத்திற்கு ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் அவரது குரலையே பயன்படுத்த வேட்டையன் படக்குழு முடிவு செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இதனை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. ஹிந்தியில் அவரே டப்பிங் பேசியுள்ளார். அக்டோபர் 10ல் படம் வெளியாகிறது.