ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சில வருடங்களுக்கு முன்பே 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தனுஷ் தனது இரண்டாவது படமாக 'ராயன்' படத்தை இயக்கி நடித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது படமாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்கிற படத்தில் இயக்க உள்ளார். அதேசமயம் நான்காவது படத்தையும் அவர் முடிவு செய்துவிட்டார். படத்திற்கு 'இட்லி கடை' என டைட்டில் வைக்கப்பட்டு அது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் போஸ்டருடன் வெளியானது. சில நாட்களாக இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக அசோக் செல்வன் தனது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “தனுஷ் சாரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடைய தீவிர ரசிகனும் கூட. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இட்லி கடையில் நான் ஒரு பாகமாக இல்லை என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.