இட்லி கடையில் நான் இல்லை ; தெளிவுபடுத்திய அசோக் செல்வன் | பிக்பாஸுக்கு போகவில்லை ஆனால்? ஜெகன் வெளியிட்ட நக்கல் பதிவு | சின்னத்திரை நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி! | மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித் : ‛பிரேக்கிங் நியூஸ்' தந்த நரேன் கார்த்திகேயன் | இனி தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி: இளையராஜா தகவல் | லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி | ''2வது திருமணம் செய்யவில்லை; பொய் சொன்னேன்'' - சுசித்ரா 'ஓபன் டாக்' | ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ? | அக்டோபர் 27ல் முதல் மாநில மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கட்டுப்பாடு!! |
சில வருடங்களுக்கு முன்பே 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தனுஷ் தனது இரண்டாவது படமாக 'ராயன்' படத்தை இயக்கி நடித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது படமாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்கிற படத்தில் இயக்க உள்ளார். அதேசமயம் நான்காவது படத்தையும் அவர் முடிவு செய்துவிட்டார். படத்திற்கு 'இட்லி கடை' என டைட்டில் வைக்கப்பட்டு அது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் போஸ்டருடன் வெளியானது. சில நாட்களாக இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக அசோக் செல்வன் தனது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “தனுஷ் சாரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடைய தீவிர ரசிகனும் கூட. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இட்லி கடையில் நான் ஒரு பாகமாக இல்லை என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.