இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? |
சில வருடங்களுக்கு முன்பே 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தனுஷ் தனது இரண்டாவது படமாக 'ராயன்' படத்தை இயக்கி நடித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது படமாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்கிற படத்தில் இயக்க உள்ளார். அதேசமயம் நான்காவது படத்தையும் அவர் முடிவு செய்துவிட்டார். படத்திற்கு 'இட்லி கடை' என டைட்டில் வைக்கப்பட்டு அது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் போஸ்டருடன் வெளியானது. சில நாட்களாக இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக அசோக் செல்வன் தனது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “தனுஷ் சாரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடைய தீவிர ரசிகனும் கூட. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இட்லி கடையில் நான் ஒரு பாகமாக இல்லை என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.