'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சில வருடங்களுக்கு முன்பே 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தனுஷ் தனது இரண்டாவது படமாக 'ராயன்' படத்தை இயக்கி நடித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது படமாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்கிற படத்தில் இயக்க உள்ளார். அதேசமயம் நான்காவது படத்தையும் அவர் முடிவு செய்துவிட்டார். படத்திற்கு 'இட்லி கடை' என டைட்டில் வைக்கப்பட்டு அது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் போஸ்டருடன் வெளியானது. சில நாட்களாக இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக அசோக் செல்வன் தனது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “தனுஷ் சாரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடைய தீவிர ரசிகனும் கூட. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இட்லி கடையில் நான் ஒரு பாகமாக இல்லை என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.