ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமை எஸ்.பி.பாலசுப்ரமணியம். 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் பிறந்த ஊரில் அவருக்கு அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் மணிமண்டபம் கட்டி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று எஸ்.பி.பி.சரண் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதல்வர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பொதுமக்களின் மாறா அன்பை பெற்ற மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில், அவர் இறுதி மூச்சு வரையில் நீண்டகாலம் வாழ்ந்த சென்னை-34, நுங்கம்பாக்கம் காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி' என பெயர் மாற்றம் செய்ய உரிய ஆவன செய்ய வேண்டும்.
இதை அவருடைய ரசிகன் என்ற முறையிலும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சார்பிலும், என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.