தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலாக 126 கோடியைக் கடந்ததாகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு 288 கோடியை கடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், அதன்பின் கடந்த ஒரு வாரமாக எந்த வசூல் விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
கர்நாடகாவில் 25 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்தே 25 கோடிதான் வந்திருக்கும் என்கிறார்கள். வட மாநிலங்களில் 25 கோடியும் வெளிநாடுகளில் வசூலான தொகை 150 கோடி என்பதும் தகவல்.
இந்த வாரம் பல புதிய படங்களும், அடுத்த வாரம் சில புதிய படங்களும் வெளியாக இருப்பதால் 'தி கோட்', 500 கோடி வசூலைக் கடப்பது சிரமம் என்பதுதான் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் தற்போதைய அப்டேட்.