இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் | இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பகூடாது : ஏ.ஆர்.ரெஹானா சொல்கிறார் | கூலி படத்தின் சண்டைக்காட்சி லீக் : லோகேஷ் கனகராஜின் வருத்தமான பதிவு | பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலாக 126 கோடியைக் கடந்ததாகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு 288 கோடியை கடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், அதன்பின் கடந்த ஒரு வாரமாக எந்த வசூல் விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
கர்நாடகாவில் 25 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்தே 25 கோடிதான் வந்திருக்கும் என்கிறார்கள். வட மாநிலங்களில் 25 கோடியும் வெளிநாடுகளில் வசூலான தொகை 150 கோடி என்பதும் தகவல்.
இந்த வாரம் பல புதிய படங்களும், அடுத்த வாரம் சில புதிய படங்களும் வெளியாக இருப்பதால் 'தி கோட்', 500 கோடி வசூலைக் கடப்பது சிரமம் என்பதுதான் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் தற்போதைய அப்டேட்.