ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலாக 126 கோடியைக் கடந்ததாகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு 288 கோடியை கடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், அதன்பின் கடந்த ஒரு வாரமாக எந்த வசூல் விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
கர்நாடகாவில் 25 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்தே 25 கோடிதான் வந்திருக்கும் என்கிறார்கள். வட மாநிலங்களில் 25 கோடியும் வெளிநாடுகளில் வசூலான தொகை 150 கோடி என்பதும் தகவல்.
இந்த வாரம் பல புதிய படங்களும், அடுத்த வாரம் சில புதிய படங்களும் வெளியாக இருப்பதால் 'தி கோட்', 500 கோடி வசூலைக் கடப்பது சிரமம் என்பதுதான் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் தற்போதைய அப்டேட்.