வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் |
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் பலரும் அவரை விரும்பி அழைத்து தங்களது படங்களுக்கு நடனம் அமைக்கச் செய்வார்கள்.
'ஜெயிலர்' படத்தில் 'காவாலய்யா', 'வாரிசு' படத்தில் 'ரஞ்சிதமே', 'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா', 'பீஸ்ட்' படத்தில் 'அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா', 'டாக்டர்' படத்தில் 'செல்லம்மா', 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் 'காந்தக் கண்ணழகி', 'மாரி 2' படத்தில் 'ரவுடி பேபி', 'குலேபகாவலி' படத்தில் 'குலேபா' ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து இங்கும் புகழ் பெற்றவர்.
21 வயதான நடனப் பெண் ஒருவரை 'பாலியல்' ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது சைபராபாத், ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்த போதும் நர்சிங்கி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிலும் தன்னை பல முறை தாக்கியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அந்தப் புகார் அடுத்த கட்ட விசாரணைக்காக நர்சிங்கி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டர் மீது, 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்), 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் ஷிகா கோயல் இது குறித்து விசாரிக்கும்படி திரைப்பட அமைப்பினருக்கும் ஆலோசனை சொல்லியுள்ளாராம். மேலும், பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.