பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஆளில்லாத க்ரவுண்டில் கம்பு சுற்றுவதை விட, எதிராளிக்கு முன்பு கம்பு சுற்றுவதில்தான் ஒரு திரில் இருக்கும். ஒரு பரபரப்பு இருக்கும். அதை நிகழ்த்திக்காட்ட விஜய், சூர்யா, தனுஷ் மூவரும் அடுத்த மாதம் களமிறங்குகிறார்கள்.
விஜய் நடித்துள்ள தலைவா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், அப்படத்தை அவரது பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தனுஷ் இந்தியில் நடித்துள்ள ராஞ்சனா என்ற படம் தமிழில் அம்பிகாவதி என்ற பெயரில் ஜூன் 21-ந்தேதி திரைக்கு வருகிறது.
ஆனால், இவர்கள் இருவருக்கும் முன்னதாக, ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-2 ஜூன் 14-ந்தேதியே வெளியாகிறது. இப்படி மூன்று பிரபல நடிகர்களின் படங்களும் ஒரே மாதத்தில் திரைக்கு வருவதால், முக்கிய தியேட்டர்களை கைப்பற்றுவதில் படங்களை வெளியிடும் கம்பெனிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.