அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்த படத்தில் இருந்து மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த பாடலில் பயன்படுத்தி இருந்தனர்.
வேட்டையன் படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறுகையில், ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, சூப்பர் நடிகர். ஆனபோதிலும் தன்னை ஒரு நல்ல நடிகர் என்று அவர் எங்கேயும் சொன்னதில்லை. அவருக்குள் ஒரு பிரமாதமான நடிகர் இருக்கிறார். இயக்குனரை அவர் மதிக்கும் விதம் மிக அருமை. இயக்குனர் எது கேட்டாலும் செய்வார். அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இயக்குனர் சொன்னதற்காக யோசிக்காமல் நடித்து விடுவார்.
இதனால்தான் அவர் எப்போதுமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி இயக்குனர்களுக்கும் பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். குறிப்பாக இரவில் தான் படப்பிடிப்பு நடத்தப்போகிறேன் என்று சொன்னால் எந்த மறுப்பும் சொல்லாமல், சொன்னபடி இரவு 2 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்பார். இன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு சரியாக சொன்ன நேரத்தில் வந்து நிற்பார்களா என்பது சந்தேகம்தான். அதோடு ஒரு நாள் கூட அவர் படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வந்ததில்லை. தொழிலை நேசித்து வருவதினால்தான் அவர் இத்தனை காலமும் சினிமாவில் நிலைத்திருக்கிறார் என்று ரஜினி குறித்து கூறியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.