தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” |
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தற்போது இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்பி.,யாக இருக்கிறார். இவர், இயக்கி, நடித்துள்ள 'எமர்ஜென்சி' படம் செப்.6-ல் வெளியாக இருக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்பு, சீக்கிய அமைப்புகளின் மிரட்டல், தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் படம் வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இந்தப் படத்தை தனது முழு சொத்தையும் விற்று எடுத்திருப்பதாக பல நேர்காணல்களில் கங்கனா கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர், மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை 32 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார். இதனை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. இந்த பங்களாவை 6 வருடத்திற்கு முன்பு 20 கோடிக்கு வாங்கிய கங்கனா தற்போது 12 கோடி ரூபாய் லாபத்தில் விற்று உள்ளார்.
இந்த பங்களாவை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டியிருப்பதாக முன்பகுதியை இடித்தார்கள். இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கங்கனா. இந்த வழக்கில் கங்கனாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.