‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. 2015-ம் ஆண்டில் வெளிவந்த 'உறுமீன்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து 'மரகத நாணயம்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சிலர்', 'கள்வன்' உள்ளிட்ட பல வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படங்களை தயாரித்தார்.
சில மாதங்களாக இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நள்ளிரவில்(செப்., 9) சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
டில்லி பாபு இப்போதும் கூட தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க சில இயக்குனர்களுடன் ஒப்பந்தம் போட்டு வந்தார். இதுதவிர தனது மகவ் தேவ்வை ஹீரோவாக்கி 'வளையம்' என்ற பெயரில் ஒரு படத்தினை தயாரித்து வந்தார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவரது கனவும். ஆனால் அந்த கனவு முழுமை அடையும் முன்பே அவர் மறைந்துவிட்டார்.