நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழ் சினிமாவில் காமெடி டிராக் எழுதி புகழ்பெற்றவர் ஏ.வீரப்பன். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பது பலர் அறியாத ஒன்று. 1956ம் ஆண்டு வெளியான 'தெனாலிராமன்' படம் தொடங்கி, கலங்கரை விளக்கம், ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், பட்டணத்து ராஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு காமெடி டிராக் எழுதியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், இதயகோவில், கரகாட்டக்காரன், சின்னதம்பி போன்றவை அவற்றில் முக்கியமானவை.
இதுதவிர அவர் 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ரோஜா ரமணி, வடிவுக்கரசி நாயகியாகவும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். காமெடி ஹாரர் ஜானர்னரில் உருவான படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஏ.வீரப்பன் படமும் இயக்கவில்லை.
பல வருடங்கள் சினிமாவில் பணியாற்றினாலும் கடைசி காலத்தை வறுமையில் கழித்தார். கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து காமெடி டிராக் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும், அவரிடமிருந்து எந்த உதவியையும் அவர் பெறவில்லை.