கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழகத்தில் அனுமதியின்றி அத்துமீறி வைக்கப்பட்ட 'பேனர்'களால் தொடர்ந்து சில விபத்துக்கள் நடந்தன. அதன்பின் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களின் எண்ணிக்கைகள் கொஞ்சம் குறைந்தன. இருந்தாலும் சில அரசியல் கட்சிகள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்னமும் பேனர்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சினிமா தியேட்டர்களிலும் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம்தான். முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய படங்கள் ஆகியவற்றிற்கு அப்படியான பேனர்கள் வைக்கப்படும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் தியேட்டர் வளாகங்களில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பல தியேட்டர்களில் அகற்றப்பட்டன.
இதையடுத்து தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகர மேயருக்கு இந்த பேனர்கள் அகற்றப்படுவது குறித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில், “தற்போதைக்கு ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களின் பேனர்களைத்தான் வைக்கிறோம். குறைந்த நாட்கள்தான் ஒரு படத்தின் உயிர் என்றாகிவிட்ட இந்நாட்களில் அப்படியான பேனர்கள்தான் எங்களது வியாபாரத்திற்குத் தேவையான ஒன்றாக உள்ளது. கடந்த 75 வருடங்களில் மாநகரத்தில், கடும் மழைக்காலத்தில் கூட எந்தவிதமான விபத்துக்களும் இதன் மூலம் நடந்ததில்லை. எங்களது வளாகங்களில் திரைப்பட பேனர்களை வைப்பதற்கான விலக்கு அளிக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறோம்,” என்று சில சட்ட விதிகளைக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே சமயம் விஜய் நடித்து செப்டம்பர் 5ல் வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்காகவே இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆளும் அரசான திமுக மோதல் நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால்தான் இப்படி நடக்கிறது என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். அதே சமயம், பொதுமக்கள் பலரும் இப்படியான கட்டுப்பாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.