சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! |
90களின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மற்ற மொழிகளிலும் சில நடிகர்களை மிகவும் பிடிக்கும். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் இன்று வரையிலும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிலிருந்து நிறைய டப்பிங் படங்கள் தமிழில் வெளியாகும். அப்படி வெற்றி பெற்றவர்களில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா படங்கள் அதிகம். நாகார்ஜூனா தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வந்த 'இதயத்தை திருடாதே, உதயம்' ஆகிய படங்கள் இங்கு 175 நாட்கள் ஓடிய படங்கள். அதன்பின் தமிழில் 'ரட்சகன், தோழா' என இரண்டு நேரடிப் படங்களில் நடித்தார் நாகார்ஜூனா.
தற்போது தனுஷ் நடித்து வரும் இரு மொழிப் படமான 'குபேரா' படத்தில் நாகார்ஜூனா நடித்து வருகிறார். அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாகார்ஜூனாவின் பிறந்தநாளான நேற்று வெளியானது.
“நன்றி.. லோகி. 'கைதி' படத்திலிருந்தே உங்களுடன் பணி புரிய காத்திருக்கிறேன். நமது பயணத்திற்காக உற்சாகமாக இருக்கிறேன். 'தலைவர்' உடன் திரையைப் பகிர்ந்து கொள்ளவும் எதிர்நோக்கி உள்ளேன்,” என 'கூலி' படத்தில் நடிப்பது குறித்து நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.