'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. பாலியல் புகாரால் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகள் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் மின்னஞ்சல் மூலமாக, மாநில டி.ஜி.பி.க்கும் அவர் புகார் மனுவை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் “2016ம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியதாகவும்” தெரிவித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சித்திக் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சித்திக் தவிர இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.