25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. பாலியல் புகாரால் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகள் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் மின்னஞ்சல் மூலமாக, மாநில டி.ஜி.பி.க்கும் அவர் புகார் மனுவை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் “2016ம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியதாகவும்” தெரிவித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சித்திக் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சித்திக் தவிர இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.