பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? |
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. பாலியல் புகாரால் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகள் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் மின்னஞ்சல் மூலமாக, மாநில டி.ஜி.பி.க்கும் அவர் புகார் மனுவை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் “2016ம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியதாகவும்” தெரிவித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சித்திக் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சித்திக் தவிர இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.